சில நல்ல காரியங்களுக்கு, அதாவது அவசர மருத்துவ செலவு, குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், வீடு வாங்க போன்ற வற்றிக்கு கடன் வாங்குவதில் தவறில்லை.
ஆனால் கடன் தொகை நாம் திருப்பி கொடுக்கும் தகுதிக்குள் இருக்க வேண்டும். நியாயமான வட்டியா என்று பார்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளுக்கும, திடீர் பணக்காரன் ஆகவேண்டும் என்பதற்காக கடன் வாங்குவது தவறு.
பெரும்பாலும் மத்திய அரசு வங்கிகளில் கடன் வாங்குவது நல்லது. இப்போதுள்ள பொருளாதார நிலையில் நடுத்தர குடும்பங்களில் கடன் வாங்காமல் வீடு கட்ட முடியாது. எனவே வங்கிகள் வழங்கும் இந்த கடன்களை நல்ல முறையில் பயன் படுத்தினால், கடன் வாங்கியும் வாழ்கையில் முன்னேறலாம்.
"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"
ஒரு அரசனே கலங்கினான் என்கிறார் புலவர். இன்று அமெரிக்காவை வாட்டுவது அவர்கள் வகுத்த பல கடன் திட்டங்களும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கையும் தான். எளிமையான வாழ்கையே என்றும் நிரந்தரம் என்பதை இப்போதுதான் உணர்கிறார்கள்.
அனால் நமது இந்திய அரசு இன்னும் உணர்ந்ததாக தெரிய வில்லை. உலக மயமாக்கல் கொள்கையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இருபது ஆண்டுகளில் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பதை விட ஒரு நல்லரசு ஆக வேண்டும் என்று திட்டமிட வேண்டும் , பசி, பிணியற்ற மக்களை கொண்டு நேர்மையான நல்ல ஜனநாயக நாடாக அமைய வேண்டும். வல்லரசு தேவையில்லை, நல்லரசுதான் நமக்கு தேவை.
வங்கிகளில் பென்சனர்களுக்கு கடன் திட்டம்
பென்சன் பட்டுவாடா செய்யும் அனைத்து வங்கிகளும் பென்சனர்களுக்கு தாரளமாக கடன் வழங்குகிறது. சில வங்கிகள் பத்து மாத பென்சனை கடனாகவும் சில வங்கிகள் பன்னிரண்டு மாத பென்சனை கடனாகவும் பென்சனர் வயது எழுபது வரை வழங்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி எழுபத்திரெண்டு வயது வரை கடன் வழங்குகிறது. வாங்கிய கடனை திருப்பி கட்டிய பின் ஒருவர் திரும்பவும் கடன் பெறலாம்.
பாரத ஸ்டேட் வங்கி ஒருபடி மேலே போய் 50 வயதிற்குட்பட்ட பென்சனர்களுக்கு நாற்பது சதவீத பென்சனை நாற்பத்தெட்டு மடங்கு கணக்கிட்டு ஏழு ஆண்டுகளில் திருப்பி கட்ட வகை செய்கிறது.
இந்த கடன் திட்டத்தின் பெயர் "ஜெய் ஜவான் கடன் திட்டம்"
இதன்படி 50 வயதிற்குட்பட்ட ராணுவ பென்சனர்களுக்கு கூடுலதளன கடன் தொகை ரூ.இரண்டு லட்சம் வரை கிடைக்கும். பென்சன் பட்டுவாடா செய்யும் அனைத்து பாரத ஸ்டேட் வங்கி கிளைகளிலும் இந்த கடன் தாரளமாக வழங்கப்படுகிறது.
தொடரும்.....
No comments:
Post a Comment