'பென்சன்' என்பது ஒருவரது சொத்துக்கு ஈடானது என்கிறது இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம். இதை யாரும் அபகரித்து செல்ல முடியாது. பணிபுரியும் காலங்களில் இதை பற்றி இந்த ராணுவ வீரன் சிந்திக்கவே இல்லை. வெளியே வந்த பின் தனக்கு கிடைக்கும் பென்சனை கணக்கிட துடிக்கிறான். ஆனால் எடுத்து சொல்வார் யாரும் இல்லை. ஆம் இது தான் உண்மை நிலை. ராணுவ பணியில் ஒழுக்கம் தான் உயிர்நாடி என்று உரக்க கூறி அதை செயல் படுத்தும் போது அவனின் சிந்தனை செயலற்று போகிறது. ஒவ்வொரு பணியிலும் ஒவ்வொரு வகையான பாதிப்பு ஏற்படுவது இயற்க்கை. ஆனால் ஒரு மனிதனின் சிந்திக்கும் திறனை காலப்போக்கில் இழக்க செய்வது இந்த ராணுவ பணிதான் என்று கூறினால், அதை நீங்கள் ஒப்புகொள்ளும் போதுதான் இந்த முப்படைகளின் சக்தி புரியும் உங்களுக்கு. ஆம், ராணுவ பணியில் 'கொடுத்த கட்டளையை நிறைவேற்று' ' Obey the Order' இது ஒன்றுதான் தாரக மந்திரம். செய் அல்லது செத்து மடி. இதற்கு கட்டுப்பட்டு குறைந்தது பதினைந்து ஆண்டுகள் (அதாவது சிவில் வேலையில் முப்பத்தி முன்று ஆண்டுகளுக்கு சமம்) வேலை செய்தால் தான் இந்த குறைந்த பென்சன் கிடைக்கும் என்பது வெளி உலகில் உள்ள எத்தனை பேருக்கு தெரியும் ?
விலை மதிப்பில்லா இந்த சிந்தனை சக்தியை இந்த நாட்டுக்கு அர்பணித்து அதற்க்கு விலையாக கிடைக்கும் இந்த பென்சனை வாழ் நாளில் முதன் முதலில் பளிச்சென்ற பகல் ஒளியில் கூட பல நியான் விளக்குகளில் ஜொலிக்கும் வங்கிகளில் பெரும் போது அவன் மனதில் தோன்றும் எல்லையில்லா மகிழ்ச்சியை எழுத இடம் இல்லை. அதே நேரத்தில் பெருமை மிக்க இந்த வங்கிகள் தனது பென்சனை சரியாக கணக்கிட்டு கொடுக்க வில்லை என்பதை பின்னர் அவனுக்கு தெரிய வரும்போது அவன் படும் வேதனை அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.
இதை விட அதிகம் துடிப்பவன் இவனுடன் பணியாற்றி அதே வங்கியில் வேலை செய்யும் மற்றொரு இறக்க குணம் கொண்ட ஒரு முன்னாள் படை வீரன் என்றால் அது தான் உண்மை. அவனுடைய உணர்வுகள் தான் இந்த இணைய தளத்தில் வெளியிட காரணம்.
ஆம், தனது அறியாமையில் தான் தனது பொன்னான பென்சனை சரியாக கணக்கிட தெரியாமல் வங்கிகள் கொடுப்பதை இன்னும் பெற்று செல்கின்றனர். அவர்களுக்கு எடுத்து சொல்வார் யாரும் இல்லை. அப்படி யாரேனும் கூறினாலும் அதை நம்ப தயாராக இல்லை அவர்கள். காரணம் வங்கிகள் மீது அத்தனை மதிப்பு அவர்களுக்கு. இந்நிலையில் எப்படி இவர்களுக்கு எடுத்துரைப்பது இந்த உண்மையை என்று சிந்திக்கும் போதுதான் தோன்றியது 'பென்சன் உங்கள் நண்பன்' என்ற புத்தகமும் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த இணைய தள தொடர்புகளும்.
என் அருமை நண்பர்களே, இதை நீங்கள் படித்து எல்லோருக்கும் பயனுடையதாக இருக்க செய்யுங்கள். செய்வீர்களா ?
நடந்து முடிந்தவைகள் ஒருவனுக்கு நல்ல படமாக அமையவேண்டும்.
செயலுக்கு வித்து உன் சிந்தனை (அது நல்லதாக இருக்கவேண்டும்)
கல்லும், மண்ணும் கரைந்தாலும், கற்ற கல்வி அழியாது.
கனவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை.
நாள்தோறும் வாழ்வேன் என்று கற்று கொள்ளுங்கள்.
நாட்டை காப்பவனை, ஆள்பவன் மறக்கலாகாது.
ஒருவரின் அனுபவம் மற்றவனுக்கு ஒரு பாடம்