முன்னாள் முப்படை வீரர்களின் நிலை.
பென்சன் உங்கள் நண்பன் என்ற புத்தகத்திலிருந்து சில துளிகள்......
பாதுகாப்பு படையை இளமையுடன் வைத்திருக்கும் பொருட்டு,
அதில் பணிபுரிபவர்களை நல்ல நடுவயதிலேயே
வீட்டுக்கு அனுப்பி விடுகிறது இந்திய அரசு.
உயிரை பிணையம் வைத்து, ஊண் உறக்கம் இன்றி
உயிரனமே இல்லாத பாலை வனத்திலும்,
குலை நடுங்கவைக்கும் குளிரிலும்,
சுட்டெரிக்கும் வெயிலிலும், ஆழ்கடலிலும்,
அதிரவைக்கும் பூகம்பத்திலும்,
தாய், தந்தை, மனைவி, மக்களை மறந்து
தாய் திரு நாட்டின் எல்லையில்
காவல் புரியும் நம் படை வீரர்களின் துன்பங்களை -
அவர்களுடன் பணி புரிந்தவர்களை தவிர
மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை.
அதனால் தானோ என்னவோ நமது
அவல நிலை தொடர்கிறது. வேலையில்லா கொடுமையில்
ராணுவத்துக்கு செல்வது உண்மைதான்.
இதை பெரிய சேவை என்று நாங்கள் வர்ணிக்கவில்லை.
ஆனால் செய்யும் பணிக்கு தகுந்த ஊதியமும், உதவியும்
வழங்கப்படுகிறதா என்பது தான் கேள்வி.
மனித உயிர் விலை மதிப்பற்றது. அனைவரும் அறிந்த உண்மை.
இந்த உயிரை பிணையம் வைத்து பணிபுரிபவர்களையும், பணிபுரிந்தவர்களையும் இந்திய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்கிறது. இவர்கள் மற்ற பணியாளர்களை போல வேலை நிறுத்தம்
செய்ய முடியாது. சங்கங்கள் வைத்து தமது கோரிக்கைகளை
எடுத்துரைக்க நாதி இல்லாது அல்லல் படுகின்றனர்
ராணுவ பணி என்பது ஒரு தேசத்தின் முதல் பணி.
தேசிய ஒற்றுமையையும் ஒருமை பாட்டையும்
நாட்டின் கௌரவத்தையும் உலக அரங்கில்
உயரத்தில் நிலை நிறுத்தி வைப்பவர்கள்
இந்த ராணுவ வீரர்களே என்று கூறினால் அது மிகை ஆகாது.
ஆனால் சமீப காலங்களில் இந்த ராணுவ வீரர்கள்
செல்லா காசாகி வருகிறார்கள். தாங்கள் ராணுவத்தில்
பணி புரிந்ததை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்பவில்லை.
தேசப்பற்று, கடமையுணர்வு, ஒழுக்கம், கட்டுப்பாடு,
கீழ்படிதல், தலைமை ஏற்று தனி தன்மையுடன் செயலாற்றும் திறன்,
இன்னும் எத்தனையோ நல்ல பல குணங்களை கொண்டு
ராணுவத்திலிருந்து பணி விலகி வந்தவுடன்
இவை அனைத்தும் கேலி கூத்தாகிவிடுகிறது
வெளி உலக வாழ்கையில். தன் இளமை காலத்தை
இமயமலை எல்லையில் கண்கொட்டாமல் கண்காணித்து
வந்ததை நினைத்து வருந்துகிறான் இன்று. காரணம் -
அவன் செய்த ஈடு இணையற்ற பணிக்கு
தகுந்த சன்மானம் இல்லை இந்த நாட்டில்.
நேர்மை, நாணயம், நல் ஒழுக்கம், இவை போன்ற நற்குணங்கள் மறைந்துவரும் இந்நாளில் - இவைகளையே லட்சியமாக கொண்டு வாழ துடிக்கும் நம் முப்படை வீரர்கள் படும் இன்னல்களை
எழுத வார்த்தைகள் இல்லை . வினாடிக்கு விநாடி மாறி
வரும் வெளி உலக வாழ்க்கை அறியாது, கடமையே கண்ணாயிருந்து பணிபுரிந்து வீடு திரும்பும்போது - பெற்ற தாயை தவிர மற்ற யாரும் வரவேற்பதில்லை அவனை. எனினும் அவன் வெளியே வந்தே ஆக வேண்டும். வாழ்கையை சந்தித்தே ஆக வேண்டும்.
இந்த நிலையில் அவனுக்கு வழங்கப்படுவது
அறை வயிற்று கஞ்சிக்கே போதுமான பென்ஷன் ஒன்று தான்.
அதை சரியாக பெறுவதில் உள்ள குறைகள் தான்
எத்தனை ?.எத்தனை ?........
தொடரும்......
இன்று 'ரிப்போர்ட் மை சிக்னல் ப்ளாக்' ல் 'ரிமேம்பேர் மீ. என்ற 'யு டியுப்' ப்ரோக்ரம்மை பாருங்கள் உடனே.
Please visit www.reportmysignal.blogspot.com & watch you tube ' Remember me'
நாளையபேரணிக்கு எமது நல்வாழ்த்துக்கள்
வாழ்க நமது சங்கம், வளர்க நமது ஒற்றுமை !
No comments:
Post a Comment